2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலைமையின் கீழ், அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக, பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதி குறித்து, சிக்கல் ஏற்பட்டுள்ளமையால் அதனை தீர்ப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது ஏற்புடையதென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து, ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காரணமாக, இந்த மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டதுடன், மே மாதம் 14ஆம் திகதிக்குப் பின்னரான நாளொன்றில் தேர்தலை நடத்த முடியுமென ஆணைக்குழு முன்னதாக அறிவித்து இருந்த நிலையிலேயே, தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதி குறித்து உயர்நீதிமன்றின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .