2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவதித்ததாக தெரிவித்து, பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேற்படி வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்  குழாம் முன்னிலையில், இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழாம், மேற்படி வழக்கை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .