2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட 172 பேர் வீடு திரும்பினர்

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி-இரணைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், இந்தியாவிலிருந்து வருகைதந்த 172 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (04) வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த 172 பேரும் 14 தினங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, இன்று வீடு திரும்பியுள்ளனர். 

குருநாகல், யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, கோகாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர். 

இக்காலப்பகுதியில் இராணுவத்தினர்  தமக்கு பாரிய ஒத்துழைப்புகளை வழங்கினரென, அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .