2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்த- லக்சத செவன அடுக்குமாடி குடியிருப்புக்குள் இருந்து பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தப்பிச் சென்ற பாதாளக்குழு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளானது வௌ்ளவத்தை பிரதேசத்தில் திருடப்பட்ட ஒன்றென, ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

3 நாள்களுக்கு முன்னர் குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரால், வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பாதாளக்குழுவினர் தப்பிச் செல்லும் போது, அது மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதனையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு, சந்தேகநபர்கள் இருவரும் வேறொரு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .