2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி பிற்பகல் 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பினை நேற்று இரவு 8 மணியுடன் கைவிட்டுள்ளதாக முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலிம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோருடன்  நேற்று பிற்பகல் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .