2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திங்கள் முதல் விசேட தேடுதல் வேட்டை

Editorial   / 2019 மே 17 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில், வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுத, உபகரணங்களைத் தம்வசம் வைத்திருக்கும் நபர்களைத் தேடி, திங்கட்கிழமை (20) முதல், நாடு முழுவதிலும், விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

அனுமதிப் பத்திரங்களின்றி, வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு, அவற்றை ஒப்படைப்பதற்கான காலஅவகாசம், கடந்த 12ஆம் திகதி முதல் வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காலஅவகாசம், 20அம் திகதி அதிகாலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தால், நேற்று முன்தினம் ​(15) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் காலஅவகாசம் முடிவடைந்தவுடன், நாடு முழுவதிலும், விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .