2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

​துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை நகர சபை உறுப்பினர் பலி

Editorial   / 2018 மே 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்மலானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தெஹிவளை-கல்கிஸை மாநகர சபையின், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நகர சபை உறுப்பினர் ரஞ்சித் டி சில்வா பலியானார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முற்றத்தில், அமர்ந்திருந்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிகொண்டிருந்த போதே, இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பி​ரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அவர் மீது சுமார் 12 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கு ரி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .