2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தேர்தல் முறையில் திருத்தத்தை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குக’

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தல் முறைமையில் திருத்தத்தை மேற்கொள்ள, சகல கட்சிகளும் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று  ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், மாகாண சபைகளுக்கான தேர்தலை, புதிய முறைமையிலேயே நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாகவும்  அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள மகாவலி மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள கட்சிகள், தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக, புதிய தேர்தலை முறை சரியில்லை என்று கூறுவதைவிடுத்து, அதனை மாற்றியமைக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .