2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாதளவு தொழிலாளர் திணைக்களத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச சேவை தொழில் அலுவலக பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச பணியாளர்களின் போக்குவரத்து கொடுப்பனவை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாது விட்டால் ஜனவரி மாதத்திலிருந்து தொழில் அதிகாரிகள் சிரேஸ்ட கடமைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக       அரச சேவை தொழில் அலுவலக பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஐ.சி கமகே தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறானதொரு நிதி நெருக்கடி தொழிலாளர் திணைக்களத்தில் இல்லையென தொழிலாளர் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.பீ.ஏ. விமலவீரகந்த தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கமைய குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .