2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டின் எல்லையை சட்டவிரோதமாக கடந்த இலங்கையர் ஐவர் கைது

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் நாட்டின் எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முற்பட்ட இலங்கைப் பிரஜைகள் ஐவரும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த மேலும் 8 பேரும், அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போலாந்து - உக்ரேன் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது,  ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 5 இலங்கையர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், போலாந்தின் எல்லையில் கைதான 13 பேரும் உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, அவர்களுக்கு எதிராக உக்ரேன் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .