2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி பெண் பலி

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தென்ன – யடிபேரிய பிரதேசத்தில்  களனி கங்கையில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து தனது குடும்பத்தாருடன் சுற்றுலாவுக்காக வந்திருந்த, 24 வயதுடைய குறித்த பெண்ணே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் களனி கங்கையில் நீராடி கொண்டிருந்த வேளையில், குறித்த பெண் திடீரென காணாமல் போனதையடுத்து, அருகிலுள்ள பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடல் பணிகள் இடம்பெற்றது.

அவர் நீராடிய இடத்திலிருந்து சற்று தொலைவிலிருந்து, அவரது சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .