2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நெதர்லாந்து ஜோடி மீது தாக்குதல் விவகாரம்: உணவகத்துக்குப் பூட்டு

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடியொன்றைத் தாக்கித் துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், மிரிஸ்ஸ பிரதேசத்திலுள்ள சுற்றுலா உணவகத்தை, தற்காலிகமாக மூடிவிட, இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இந்தம் தீர்மானம் குறித்து தமக்கு அறிக்கப்பட்டுள்ளதாக, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதியன்று இடம்​பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து, 6 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளைத் துன்புறுத்தும் நபர்களுக்கு, அரசியல்வாதிகள் ஆதரவு வழங்கிவருதாக, ஹோட்டல் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .