Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொறோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை, சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள 'நாரா' எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், 'நக்டா' எனப்படும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் உள்ள பி.சி.ஆர் உபகரணங்களை, கொரோனா தொற்று நோயை பரிசோதிப்பதற்கு சுகாதார துறையினருக்கு உடனடியாக வழங்குமாறு, குறித்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள, புத்தளம், கல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின அலுவலகம் மற்றும் விடுதிகளையும், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களென சந்தேகிக்கப்படுபவர்களை தங்கவைப்பதற்கான தனிமைப்படுத்தும் மய்யம் அமைப்பதற்காக தற்காலிகமாக வழங்குமாறும், குறித்த நிறுவனத்தின் தலைவர் நவரட்ணராஜாவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், கொறோனா தொற்றை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பி.சி.ஆர். உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளமையால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால், மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2024