Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன், க.கமல்
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, இரண்டு வாரங்களுக்குப் பதவி விலக வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவிடவில்லை என, அரசாங்கத் தகவல் மூலங்கள் நேற்று (20) தெரிவித்தன.
பொலிஸ்மா அதிபர் மீது, அண்மைக்காலமாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அவர் இவ்வாறு பதவி விலக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள தென, தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், இது தொடர்பான மறுப்பை வெளியிட்ட பிரதமர் அலுவலகம், அவ்வாறான பணிப்பரையை, பிரதமர் வெளியிட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டது.
அதேநேரத்தில், இச்செய்தி தொடர்பாக நாடாளுமன்றில் வைத்துக் கருத்துத் தெரிவித்த தெரிவித்த, சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, ஜனாதிபதியோ, பிரதமரோ, இவ்வாறான உத்தரவை வழங்கியிருக்கவில்லை என சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தன்னிடம் தெரிவித்தாரெனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியும், அவ்வாறான செய்தியை மறுத்தார்.
“பொலிஸ் திணைக்களத்தில் ஆரம்ப காலம் முதலே சில பிரச்சினைகள் காணப்பட்டன. சில அதிகாரிகள் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, தற்போதைய பொலிஸ்மா அதிபர் மீதும், அவரது பேச்சுத் தொடர்பாடல் முறை குறித்த முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஐக்கிய தேசிய கட்சிக்குச் சார்பாகச் செயற்பட்டாரென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவையென அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
26 Apr 2024