2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

போதையில் வாகனத்தை செலுத்திய முன்னாள் நீதிபதி கைது

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்-வாரியபொல பிரதான வீதியின் மினுவாங்கொடை பிரதேசத்தில் போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதிவான் நீதிபதி ஜயபிரேம பீ. தென்னக்கோன் ​நேற்று (20) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான முன்னாள் நீதிபதி செலுத்திய வாகனம் நேற்று  (20) விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 35 வயதான பெண்ணும், அவரது 12 வயதான மகளும் கடுங் காயங்களுக்குள்ளாகியதாக வாரிய​பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .