2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’ம.வி.முவின் உதவியின்றி எதிர்காலம் இல்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னிணியின் உதவி இல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என ம.வி.முவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் தேசிய சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னிணியின் உதவி இல்லாமலும் அநுர, ஹந்துன்நெத்தி ஆகியவர்களின் உதவி இல்லாமலும் எதிர்வரும் 10 வருடங்களுக்கு நாட்டை உருவாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் மெதமுலான ஊருக்கு, சஜித் பஸ்ஸொன்றை வழங்கி, அவரே பஸ்ஸை ஓட்டிச் செல்வதை அவதானித்ததாகக் கூறிய  அவர். வீதி ஒழுங்கு தெரியாத ஒருவருக்கு, எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .