Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 05 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்னம்
பதுரெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலித்த நுவர குக்குலே கங்கை பகுதியில், ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவரில் ஒருவரை பதுரெலிய பொலிஸார் நேற்று (04)கைதுசெய்துள்ளனர்.
குக்குலே கங்கையின் ஆற்றங்கரை சேதமடையும் வகையில் மாணிக்ககல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக, பதுரெலிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தில்ருக் கொலம்பகேவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஒன்றின் அடிப்படையில், விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போலிஸார் வருவதை அவதானித்த மற்றைய நபர் ஆற்றில் ஆற்றில் குதித்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
58 minute ago
3 hours ago
7 hours ago