2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மன்னார் கடற்கரையில் இந்தியக் கழிவுகள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார், மன்னார் மற்றும் பூநகரி ஆகிய கடற்கரைப் பகுதிகளில், இந்தியக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாகவும், இதனால் பாரியளவில் மீன்கள் உயிரிழக்க நேரிடுவதுடன், சுற்றுச் சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் மன்னார் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர், இவ்வாறு புத்தளம் கடற்பரப்பிலும் இத்தகைய கழிவுகள் கரையொதுங்கியிருந்தன. இதனால் கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதுடன், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை, இன்று (20) இவ்வாறு கரையொழுங்கியிருக்கும் இந்தியக் கழிவுகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

அத்துடன் பிளாஸ்ரிக் உள்ளிட்ட குறித்த மருத்துவக் கழிவுகளுக்கு உரித்துடைய நிறுவனம் தொடர்பிலும் ஆராய, கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .