2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மல்லாகம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஐவர் கைது

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில், இடம்​பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்விடத்தில் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஐவரே, இன்று அதிகா​லை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியில் நேற்று (17) இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதோடு, இன்னொருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .