2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருக்கு தண்டம்

Editorial   / 2017 நவம்பர் 17 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சமன் அபேகுணவர்தனவுக்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்ஹ, 6, 000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கு உரியை சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான ஆவணங்களை கையளிக்காமை தொடர்பிலான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த தவறின், மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .