2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மினுவாங்கொடையில் சலசலப்பு

Editorial   / 2019 மே 18 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவான்கொடை நகரசபையால்,  இன்று, மினுவான்கொடை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளால், அப்பிரதேசத்தில் பதற்றமான நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தக நிலையங்களில் “இது நகரசபைக்குச் சொந்தமான பூமி, உள்ளே நுழைவது தடை” என, நகரசபை தவிசாளர் நீல் ஜயசேகரவின் உத்தரவின் பேரில், இந்த பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவித்தலுக்கு வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த, மினுவான்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி, மினுவான்கொடை நகர சபை தவிசாளரைத் தொடர்புகொண்டு குறித்த பதாதைகளை அகற்றுமாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .