2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரோசியின் கொடுப்பனவு அதிகரிப்பு?

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை வெற்றிப்பெற்றுள்ளது.

கொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர்களும் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவும் 1.4 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, போக்குவரத்து, முத்திரை மற்றும் தபால் செலவீனங்களுக்கான நிதி, 13 ஆயிரம் ‌ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .