2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் உட்பட இருவர் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்தில், இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலை – தம்புள்ள பிரதான வீதியின் படல்கமுவ பிரதேசத்தில், இராணுவ வீரர் ஒருவர் செலுத்திச் சென்ற பஸ்ஸும் லொறி ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது, பஸ்ஸை செலுத்திச் சென்ற இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், குருநாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அதே பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் கெப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .