2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இருவருக்குக் கடூழியச் சிறை

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 30 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த இருவருக்கு, 2 மாதங்கள் கடூழியச் சிறை தண்டனை விதித்து, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச். எம் ஹம்ஸா, இன்று (17) உத்தரவிட்டார்.

 

மேற்படி குற்றத்தை ஒப்புக்கொண்டமையால், குறித்த நபர்களுக்கு அறிவுரை கூறிய நீதவான், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும், அந்தப் பணத்தைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 2 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளித்தார்.

50, 53 வயதுகளையுடைய இருவருக்கே, மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .