2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிறுமிக்குச் சித்திரவதை; தந்தை கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் 9 வயதுச் சிறுமியைப் பொல்லால் தாக்கி சித்திரவதை செய்த தந்தை, நேற்று (14) மாலை  கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, ரொட்டவெவயைச் சேர்ந்த எம்.எச்.அஜ்மீர் (44 வயது) என்ப​வரே கைதுசெய்யப்பட்டவராவார்.

மதுபோதையில் வருகை தந்து தனது கணவர், மகளை பொல்லால் அடித்து, நெற்றியிலும் முதுகிலும் காயப்படுத்தினாரென, மொறவெவ பொலிஸ் நிலையத்தில் மனைவியால் ​முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளான சிறுமி, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளாரென, வைத்தியசாலை வைத்தியதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .