2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஜயந்திபுரப் பகுதியில் எட்டு முதிரை மரக்குற்றிகளை, சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை, இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க நேற்று(9) உத்தரவிட்டார்.                                

இந்தச் சம்பவத்தில் வான்எல மற்றும் ஜயந்திபுர பகுதியை சேர்ந்த 32,மற்றும் 26 வயதுடையவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியொன்றில் எட்டு முதிரை மரக்குற்றிகளை கடந்த வெள்ளிக்கிழமை(08)  கடத்திச் சென்றப்போது, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஜயந்திபுரப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .