2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கந்தளாய்ப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ,முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று(21) மாலை விபத்து ஏற்பட்டது என,கந்தலாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.   

குறித்த சம்பவத்தில்,  கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.சப்ரான் (20),நௌசாட் முஹம்மட் (21) ஆகிய இருவருமே  பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கந்தலாய்ப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .