2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

​ஹெரோய்னுடன் ஒருவர் கைது

எப். முபாரக்   / 2018 நவம்பர் 22 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் 10 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை நேற்று (21) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், மட்கோ, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரெனவும், பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி சுற்றிவளைப்பினை மேற்கொண்டு,10 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை கைப்பற்றியதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .