2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’2020இல் ஓய்வுப்பெற போவது இல்லை’ ஜனாதிபதி

Editorial   / 2018 மே 07 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

"2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது.

'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய  ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 2020இல் தாம் ஓய்வு பெறபோவதாக செய்திகளை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் 2020இல் தாம் ஓய்வுபெற போவது இல்லை எனவும், நாட்டுக்கு ஆற்றவேண்டிய பணிகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .