2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சஜித் முடிக்கையில், ரணில் தொடங்குகிறார்; ஆறு பேருக்கு தடை

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட கூடாதவர்கள் என்ற பெயர்ப்பட்டியலொன்று சஜித் பிரேமதாசவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் குறித்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் மிகவும் ஆக்ரோஷமான முறையில் செயற்படுவார்கள் என்பதால் அவர்களை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டாம் என, ரணில் விக்கிரமசிங்க  அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டார,  திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம், அஜித் பீ. பெரேரா, சுஜீவ சேனசிங்க மற்றும் நலின் பண்டார ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதசவால் பெயரிடப்படும் நபர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ள, செயற்குழுவினால் அனுமதியளிக்க வேண்டும்.

இந்த நிலையில், கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .