2024 மே 08, புதன்கிழமை

நீர்கொழும்பில் கொங்கிரீட் உடைந்து விபத்து

Editorial   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, பெரியமுள்ள பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் கொங்கிரீட் தட்டு உடைந்து விழுந்ததில், மூன்று பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், இன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டல் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு நபரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X