2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு ஊர்வலம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு பகுதியில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம், கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.சி. அன்சார் தலைமையில் இன்று (21) நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம், தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் தொடங்கி,  திருமலை வீதி வழியாக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மண்டபம் வரை சென்றடைந்தது.

இதன்போது,மட்டக்களப்பு, திருகோணமலை நகர லயன்ஸ், லியோ கழகங்கள் மற்றும் நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் வெள்ளைப்பிரம்பின் முக்கயத்துவத்தை வெளிப்படுத்தும்  வகையில் பதாதைகளைத் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

இந்நிகழ்வில் விழிப்புலனற்ற மாணவர்களின் கலை கலசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. (படப்பிடிப்பு - எஸ். பாக்கியநாதன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .