2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் ஹலெப்

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்கத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் தகுதிபெற்றுள்ளார்.

றோமானியாவின் சிமோனா ஹலெப், தனது காலிறுதிப் போட்டியில் 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் பெட்ரா மார்டிக்கை வென்றே அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தனது காலிறுதிப் போட்டியில், 2-6, 3-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நயோமி ஒஸாகாவிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், உலகின் முதலாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜெரெமி சார்டியை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜூவான் மார்டின் டெல் போத்ரோ, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 3-6, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் சக ஆர்ஜென்டீனா வீரரான லியனார்டோ மேயரை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 4-6, 6-3, 7-6 (7-6) என்ற செட் கணக்கில் ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ பூஸ்டாவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .