2024 மே 08, புதன்கிழமை

இன்டர் மிலனை வென்றது லேஸியோ

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இன்டர் மிலன் உடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது.

லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல், சேர்ஜி மிலிங்கோவிச்-சவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி யங்க் பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிறெஸ்ஸியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் வென்றது.

ஜுவென்டஸ் சார்பாக, போலோ டிபாலா, ஜுவான் குவாராடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், கைகரியின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 57 புள்ளிகளுடன் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஜுவென்டஸ் காணப்படுகிறது. 56 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லேஸியோவும், 54 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இன்டர் மிலனும், 45 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுகின்றன. 39 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் றோமா காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X