2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டி நாளை

Editorial   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி, ஒக்லன்டில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே இலங்கை நேரப்படி நாளை காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஒக்லன்டில் இடம்பெற்ற இரண்டு அணிகளுக்கிடையிலான குழுநிலைப் போட்டியிலும் அதிக ஓட்டங்கள் குவிக்கப்பட்ட நிலையில், குறுகிய மைதானமாக ஒக்லன்ட் காணப்படுவதால், இப்போட்டியிலும் ஓட்டங்கள் குவிக்கப்படுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் ஏழாமிடதில் காணப்பட்டவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, இப்போட்டியில் வென்றால், தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் பாகிஸ்தானின் புள்ளிகளைச் சமப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டு களமிறங்குகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .