2024 மே 09, வியாழக்கிழமை

சம்பியனான மெட்வெடெவ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 23 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவந்த தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் நான்காம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ் சம்பியனாகியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான டொமினிக் தியெமை 4-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்றே ரஷ்யாவின் மெட்வெடெவ் சம்பியனாகியுள்ளார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அரையிறுதியில் மெட்வெடெவ் வென்றதுடன், தனது அரையிறுதியில் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஒஸ்திரியாவின் தியெம் வென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X