2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீரி ஏ: வென்றது ஜுவென்டஸ்

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், 3-1 என்ற கோல் கணக்கில், ஸஸ்ஸுலோ அணியை ஜுவென்டஸ் அணி வென்றுள்ளது. ஜுவென்டஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் போலோ டிபாலா பெற்றார். ஸஸ்ஸுலோ அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை மட்டியோ பொலிட்டானோ பெற்றார்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியோடு, இப்பருவகால சீரி ஏ தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், கோல் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாமிடத்தில் ஜுவென்டஸ் உள்ளது. முதலாமிடத்திலுள்ள நாப்போலியும் மூன்றாமிடத்திலுள்ள இன்டர் மிலனும் கூட 12 புள்ளிகளையே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .