2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜோக்கோவிச்சை வென்று சம்பியனானார் ஸவ்ரேவ்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் இலண்டனில் இடம்பெற்றுவந்த தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில் உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் சம்பியனானார்.

நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தியே ஒரு மணித்தியாலம் 19 நிமிடங்கள் நீடித்த போட்டியில் ஸவ்ரேவ் சம்பியனாகியிருந்தார்.

தனது குழுநிலைப் போட்டியில் ஜோக்கோவிச்சிடம் தோற்றிருந்த ஸவ்ரேவ், தனது அரையிறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரை 7-5, 7-6 (7-5) என்ற நேர் செட்களில் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார். மறுபக்கமாக, உலகின் ஆறாம் நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் தகுதிபெற்றிருந்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .