2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நடால் வெளியேற அரையிறுதியில் சிலிச்

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் போட்டியின் நடுவே வெளியேற, உலகின் ஆறாம் நிலை வீரரான குரோ மரின் சிலிச் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

ஐந்தாவது செட் வரை சென்ற குறித்த போட்டியில், 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்றவாறு இறுதி செட்டில் மரின் சிலிச் முன்னிலை வகித்தபோதே ரபேல் நடால் போட்டியிலிருந்து விலகியிருந்தார்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோவ், தனது காலிறுதிப் போட்டியில், 4-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஐக்கிய இராச்சியத்தின் கைல் எட்மன்டிம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

உலகின் நான்காம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, தனது காலிறுதிப் போட்டியில், 4-6, 0-6 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .