2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷும் அவுஸ்திரேலியாவும் போராட்டம்

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் முதலாம் நாள் முடிவில், இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.

சிட்டகொங்கில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.

2 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், மத்தியவரிசை வீரர்கள், சிறப்பாக விளையாடியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் சபீர் ரஹ்மான் 66, முஷ்பிக்கூர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றனர்.

நேதன் லையன், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .