2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முதலாவது சுற்றிலேயே வெளியேறினார் வீனஸ்

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்றைய முதல்நாள் போட்டிகளில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், முதலாவது சுற்றுடனேயே தொடரிலிருந்து வெளியேறினார்.

கடந்தாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி வரை வந்த வீனஸ் வில்லியம்ஸ், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் டொமினிக்கன் குடியரசின் விக்டர் எஸ்ரெல்லா புர்கோஸை வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார். கடந்தாண்டு நவம்பரில் முழங்கால் காயமொன்றுக்குள்ளானதன் பின்னர் எந்தவொரு தொடரின் போட்டிகளிலும் ரபேல் நடால் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம்நிலை வீரரான பல்கேரியாவின் கிறிகர் டிமிட்ரோட், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் டெனிஸ் நொவக்கை வென்று இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

ஆறாம்நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-2, 4-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் பொஸ்பஸிலை வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஐக்கிய அமெரிக்காவின் ஜக் ஸ்டொக், தனது முதலாவது சுற்றுப் போட்டியில், 1-6, 6-7 (4-7), 7-5, 3-6 செட் கணக்கில் ஜப்பானின் யுச்சி சுகிட்டாவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .