2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்டன ஜுவென்டஸ், றியல் மட்ரிட்

Editorial   / 2020 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸும், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டும் வெளியேற்றப்பட்டன. 

இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றில், பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனிடம் எதிரணி மைதானத்தில் பெற்ற கோல்களின் அடிப்படையில் ஜுவென்டஸும், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிடம் 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் றியல் மட்ரிட்டும் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியிருந்தன. 

லயோனின் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்த ஜுவென்டஸ், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோலெண்ணிக்கையை சமப்படுத்தவே முடிந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருந்த நிலையில், லயோன் சார்பாகப் பெறப்பட்ட கோலை மெம்பிஸ் டிபே பெற்றிருந்தார். 

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றியிடம் தோல்வியடைந்திருந்த றியல் மட்ரிட், அவ்வணியின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திர்ருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங்க், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றிருந்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .