2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹட்டெர்ஸ்பீல்ட் டெளணை வென்றது செல்சி

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, பேர்ண்லி, கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி, 3-1 என்ற கோல் கணக்கில் ஹட்டெர்ஸ்பீல்ட் டெளணை வென்றது. செல்சி சார்பாக, டிமோ பக்காயோ, வில்லியான், பெட்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹட்டெர்ஸ்பீல்ட் டெளண் சார்பாகப் பெறப்பட்ட கோலை லோரன்ட் டெபோய்ட்ரே பெற்றார்.

பேர்ண்லி, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியை வென்றது. பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.

கிறிஸ்டல் பலஸ், 2-1 என்ற கோல் கணக்கில் வட்போர்ட்டை வென்றது. கிறிஸ்டல் பலஸ் சார்பாக, பகரி ஸாகோ, ஜேம்ஸ் மக்கார்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வட்போர்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டரைல் ஜன்மட் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 46 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி முதலிடத்திலுள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட்டும் செல்சியும் தலா 35 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோல் எண்ணிக்கை அடிப்படையில் மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்திலும் செல்சி மூன்றாமிடத்திலுமுள்ளன.

31 புள்ளிகளைப் பெற்றுள்ள பேர்ண்லி, நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. லிவர்பூல் 30 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் ஆர்சனல் 29 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் 28 புள்ளிகளுடன் ஏழாமிடத்திலுமுள்ளன. லெய்செஸ்டர் சிற்றி 23 புள்ளிகளுடன் எட்டாமிடத்திலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .