2024 மே 08, புதன்கிழமை

’இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 27 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

 

மாதுறுஓயா வலதுகரைத்திட்ட அபிவிருத்தியின்போது> மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களின் இன விகிதாசாரம் மாறாமல் இருக்க வேண்டும் என> கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் திங்கட்கிழமை (26) அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது> 'கோறளைப்பற்றுத் தெற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த ஆண்டில், மாதுறுஓயா வலதுகரைத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக  தெரியவந்துள்ளது.

இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் வயல் காணிகளையும்> மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளையும் மக்களுக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே> இப்பிரதேச செயலகப் பிரிவுகளில் மூவின மக்களின் விகிதாசார அடிப்படையில் மக்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும்.

இங்கு வாழ்கின்ற மக்களின் விகிதாசாரத்துக்கு   முரணான வகையில் எந்த இன மக்களுக்கும் காணி வழங்கி அபிவிருத்தி செய்யும் திட்டம் அமுல்படுத்தப்படுமானால்> அது விகிதாசாரத்தையும் இனப்பரம்பலையும் மாற்றும். இது திட்டமிட்ட குடியேற்றத்துக்கு வழிவகுக்கும்.

மேலும்> ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரலக்குளம் கிராம அலுவலகர் பிரிவில் மாதவணை> மயிலத்தமடுவில் அத்துமீறிக் குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.  அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 126 பேரைக் கொண்ட பெயர்ப்பட்டியல்> இவ்வருட மார்ச் மாத மகாவலித்திட்ட அறிக்கையுடன்; இணைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் பெயர்கள் அந்த  அறிக்கையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இனப்பரம்பலுக்கு ஆபத்து ஏற்படாமலும்> வெளியேற்றப்பட்டவர்களை அபிவிருத்தி திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படாமலும் இருப்பதால் மட்டுமே> இந்த அபிவிருத்தியில் நன்மை கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X