2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலவச கற்கைநெறிகள் ஆரம்பம்

வடிவேல் சக்திவேல்   / 2018 ஜூன் 03 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மைலம்பாவெளி எஸ்டோ உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இலவச கணினி, சிங்கள, ஆங்கில கற்கைநெறிகள் கற்பிக்கப்படவுள்ளன.

இந்தக் கற்கைநெறிகள், கல்விப் பொதுத்தர சாதாரண தரம், உயர்தரம், படித்த மாணவர்களுக்கு, தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில், ஆர்வமுள்ள மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.

வகுப்புகள், எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை 14ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களைப் பெற்று கொள்வதற்கு, “உதவும் கரங்கள்”, விபுலானந்தபுரம், மயிலம்பாவெளி, மட்டக்களப்பு, எனும் முகவரியில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விவரங்களுக்கு, 065- 3657780/ 065-3064041/ 077-8214155 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .