2024 மே 10, வெள்ளிக்கிழமை

கார் விபத்தில் ஒருவர் காயம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 மே 31 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்றுடன் மோதுண்ட நபர் ஒருவர், படுகாயங்களுக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து, மட்டக்களப்பு - சந்திவெளி பிரதேசத்தில், இன்று (31) காலை இடம்பெற்றது.

சந்திவெளியைச் சேர்ந்த சண்முகம் பேரின்பம் (60 வயது) என்பவரே, இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான குறித்த கார், தொழிலாளர் நீதிமன்ற மேலதிக நீதிபதியின் கார் எனவும், மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், எதிரே சைக்கிளில் வந்த குறித்த நபர், காருடன் மோதுண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த குறித்த நபர், சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .