2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மட்டக்களப்புக்கு விஜயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் யு.ஆர்.டீ. சில்வா தலைமையிலான குழுவினர், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றுக்கு,  வெள்ளிக்கிழமை (16) விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

சட்டத்தரணி சங்கத் தலைவரையும் குழுவினரையும்  வரவேற்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா உட்பட மாவட்டத்தின் சட்டத்தரணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

இதேவேளை, சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் யு.ஆர்.டீ. சில்வா பெறுமதியான சட்ட நூல்களையும் நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் வழங்கி வைத்தார்.

இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் ஒருவர், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தந்தமை, இதுவே முதற் தடவையாகும் என மட்டக்களப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .