2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; நால்வர் கைது

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை, வாகனேரி வயல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு சந்தேகநபர்கள், இன்று (14) காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

சட்ட விரோத மணல் அகழ்வைத் தடுக்கும் வகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் விவேட பொலிஸ் குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .