2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தென் எருவில்பற்று பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

வடிவேல் சக்திவேல்   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் 9ஆவது அமர்வு, தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில், பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (15)  நடைபெற்றது.

இச்சபை அமர்பின்போது, 2019 ஆம் அண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார்.

இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை பிறிதொரு நாளில் விசேட அமர்வு ஒன்றை நடத்தி, அதில் விவாதித்து சபையில் அங்கிகாரம் பெறுவோமென, சபை உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்ததையடுத்து, சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் விசேட அமர்வில் விவாதித்து அங்கிகரிப்பதற்காக பிற்போடப்பட்டுள்ளது.

இதன்போது பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .