2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேர்தல் சட்டம் மீறல்: ஒருவர் கைதுசெய்யப்பட்டு விடுதலை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 21 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய காத்தான்குடியில், தேர்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர், நேற்று (20) கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த நபரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சிறிய ஒலிபெருக்கியில் ஓர் அரசியல் கட்சி சார்பாக வீதி விளம்பரம் செய்தமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்தத் தகவலையடுத்து,ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவரைக் கைதுசெய்தனர்.

பின்னர் குறித்த நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒருவர் சரீரப்பிணையில்  விடுதலை செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .